புதுப்பாளையம் கிராமம், பெரிய காடு தான் எனது அப்பா (நடராஜ்), தாத்தா(மாறப்ப கௌண்டர்), பாட்டி (கருணை அம்மாள்) கொள்ளுப்பாட்டி(கருப்பாத்தாள்), என் அம்மா, என் தங்கை மற்றும் நான் வாழ்ந்த வீடு, ஒரு அழகான கூட்டு குடும்பம். என் தாத்தாவிற்கு மூன்று குழந்தைகள் என் அப்பா மூத்தவர், மற்றும் இரண்டு இளைய சகோதரிகள்.
அத்தை குடும்பத்தார்:
பெரிய அத்தை பொண்ணு காவிதா(பேபி அக்கா), சின்ன அத்தை பொண்ணு மலர்விழி, தீபிகா, சின்ன அத்தை பொண்ணு ப்ரியா, தங்கை, மச்சான், பெரிய அத்தை மகன் சிவப்பிரகாஷ்(மச்சான்), பேபி அக்கா கணவர் சதீஷ்குமார், மலர்விழி கணவர், சின்ன அத்தை மகன் கலைப்பிரகாஷ்.
பெரிய மாமா, சின்ன மாமா:
பெரிய மாமா சிவசாமி மற்றும் சின்ன மாமா நடராஜ்
பெரியம்மா குடும்பத்தார்:
பெரியம்மா, பெரியப்பா, பெரியப்பா பையன் நவநீத்
விடுமுறை என்றால் விழாபோல வீடு மாறிவிடும்
மாறாத்தாள் கொள்ளுப்பாட்டி - மறைவு (22-04-2004)
என்னை அதிகம் நலன் விசாரிப்பார் அதிகம் ஆசிர்வதித்தவர், 100 ஆண்டுக்கு மேல் வாழ்ந்தது என் கொள்ளுப்பாட்டி தான். இறுதி காலம் வரை கைத்தடி கூட பையன் படுத்தவில்லை. கண்கண்ணாடி போட்டதில்லை. பாட்டியைவிட கொள்ளுப்பாட்டிக்கு உடல் வலு அதிகம். கொள்ளுப்பாட்டிக்கு மூன்று மகன்கள்
கருணை அம்மாள் பாட்டி- மறைவு (13-01-2015)
சமைப்பது அம்மா மற்றும் பாட்டி தான். எனது பாட்டி செய்யும் ராகி காலி எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி தான் கடைக்கு சென்று சமையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்கிவருவார். வீட்டுக்கு வருபவர்கள் அனைவருக்கும் உணவு தயாரிப்பார். தோட்டத்து வேலை செய்பவருக்கும் காலை தேநீர், மத்திய உணவு, மாலை தேநீர் சிலசமயம் இரவு உணவும் தாயார் செய்வார். மாடு, ஆடு, கோழி, நாய், பூனை, எருமைகளுக்கு உணவு தண்ணீர் கொடுப்பது பாட்டியின் வழக்கமான பணிகள். பிப்ரவரி 2015 இயற்க்கை எய்தினார்.
மாறப்ப கௌண்டர் தாத்தா - மறைவு (7-10-2016)
காலை தோட்டம் சென்றால் மாலை வீடுவருவார். என்னக்கு தினமும் கதைகள் சொல்லுவார், வீட்டு வரவு செலவுகள் அனைத்தும் பார்த்துக்கொள்வார். பயிர்கள், எருதுகளை வளர்பது பாதுகாப்பது வழக்கமான பணிகள். நவம்பர் 2015 இயற்க்கை எய்தினார்.
பூபதி அம்மா 12-09-1966
என் தங்கை மற்றும் என்னை பள்ளிக்கு தயார் செய்தல், எங்களுக்கு உணவு கொடுத்தல், பாடப்புத்தகங்களை சரிசெய்து பள்ளி வாகனத்துக்கு கூட்டி செல்வது, வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது, தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரிப்பது, மாடுகள், ஆடுகள் வளர்ப்பது, பிறகு தொழிற்சாலை மேற்பார்வை செய்தல், எங்களுக்கு பாடம் சொல்லித்தருவது வழக்கமான பணிகள்.
நடராஜ் அப்பா
சக்தி டெக்ஸ் என்ற பெயரில் விசைத்தறி தொழில் செய்தார், எங்கள் கிராமத்தில் பெரியகாடு நடராஜ்/சத்தி என்றால் அனைவருக்கும் தெரியும். பலருக்கு விசைத்தறி தொழில் கற்றுத்தந்தார், தொழிலாளர்களை அனைவரையும் வீட்டு நபர்போலா அக்கறையுடன் நடந்துகொள்வார். தொழில் நன்றாக வளர்ந்து ஏற்றுமதி செய்யும் அளவு நிறுவனம் உயர்ந்தது. மகா லக்ஷ்மி எஸ்ப்போர்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் மாறியது.
வசிக்கும் வீடு
கோவை சேலம் நெடுஞ்சாலையில் ஓர் நிலம் வாங்கி கீழ்தளம் வணிக அலுவலகத்திற்கும் மேல்தளத்தில் வீடும் 2000-2004லில் திறப்பு விழா கண்டது.
எங்கள் தோட்டத்தில் காளை, மாடுகள், எருமைகள், வெள்ளாடுகள் இருந்தன. அதிகாலை முதல் இரவு வரை அனைவரும் வேகமாக செயல்படுவார்கள்.
தனபால் மச்சான்:
கோவை இருகூரை சேர்ந்தவர், பொள்ளாச்சி குலத்திப்பாளையத்தில் Asian Coir தேங்காய் நார் நிறுவனம் நடத்தடி வருகிறார். என் தங்கைக்கு இரு பெண் குழந்தைகள் விஷமாகி
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.